Saturday, April 13, 2013

சி.சி.டி.வி மாட்டிட்டீங்களா?”

“எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா?” கேட்டவாறே கம்பீரமாக அமர்ந்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். 

“ஆமா சார் ஆரம்பிச்சுடலாம்” என்றவாறே மைக்கை சரிசெய்தார் உதவியாளர். 

அது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மீட்டிங்ஹால்.
மாவட்டத்திலுள்ள நகைக்கடை செல்போன்கடை அடகுக்கடை நிதிநிறுவனங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அனைவரும் குழுமியிருந்தனர். 

“எல்லோருக்கும் வணக்கம்.  இப்போ எதுக்கு நீங்க எல்லோரும் அழைக்கப்பட்டிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும் ஏற்கனவே உங்க பகுதி லோக்கல் ஸ்டேசன்ல மீட்டிங் வச்சு விளக்கம் சொல்லியிருப்பாங்க மீண்டும் ஏன் இந்த மீட்டிங் அப்படின்னா எல்லாம் உங்க நலனுக்காதத்தான். 

தமிழ்நாடு முழுவதும் நிறய கொள்ளைச் சம்பவங்கள் நடந்திட்டிருக்கு இருக்கிற கொஞ்சம் போலிஸ் போர்ச வச்சு எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது.  அதனால் எல்லா கடையிலேயும் அலாரம் சி.சி.டிவி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கன்ன்னு வற்புறுத்திட்டு வர்றோம் இன்னும் நெறய பேரு செய்யலன்னு தெரியும் எனவே எல்லாரும் சீக்கிரம் மாட்டுங்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்க.

கொஞ்சம் தண்ணீர் அருந்திக் கொண்டார்.

தொடர்ந்தார்.    
“சரி ஒவ்வொருத்தரா எழுந்து என்னன்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் கெஞ்சிருக்கீங்கன்னு சொல்லுங்க” 

ஒவ்வொருத்தராய் சொல்ல ஆரம்பித்தனர். நகைக்கடைக்காரர் சுந்தரம் எழுந்தார். 

“சார் நம்ம கடை சின்ன கடை மக்கள்கிட்டே பணபுழக்கம் வேற இல்ல.  வியாபாரமே இல்ல இப்ப போயி இதுக்கு செலவு பண்ண கஷ்டமாயிருக்கு சார்”

“சரி உங்க கடையில எங்வளவு சரக்கு இருக்கும்?” 

“அது வந்து” இழுத்தார்

“ஒரு கிலோ தங்கமாவது இருக்கும் இன்னிக்கு என்ன மதிப்பு ஆவுது.  ஒரு இருப்தாயிரம் செலவு பண்ணினா என்ன தப்பு? பிறகு திருட்டு போயிருச்சின்னா வாயில வயித்துல அடிச்சிப்பீங்க. 

வேணும்னா எங்க காவல்துறை செலவுல உங்களுக்கு கேமரா மாட்டித் தர்றோம்.  ஆனா இந்த சிசிடிவியை ஸ்பான்சர் செய்தது மாவட்ட காவல்துறைன்னு போர்டு வச்சுடுவோம்” என்றார்.

அனைவரும் சிரித்தனர்.

சுந்தரம் மூக்கறுபட்ட மனநிலையோடு அமர்ந்தார் இன்னனாருவர் எழுந்தார். 

“சார் ஒரு சந்தோம் கடய உடச்சு திருடவர்றவன் முதல் வேலையா கேமராவ ஆப் பண்ணிடுவான் பிறகு எப்படி கண்டுபிடிப்பீங்க?” 

“ஐயா இதிலதான் நீங்க காவல்துறையோட மூளைய புரிஞ்சுக்கணும்! ஒரு கடையில கொள்ளையடிக்கப் போறவன கண்டிப்பா அந்த கடைக்கு முன்கூட்டியே வந்து பொருள் வாங்குறமாதிரி நோட்டம் பாப்பான்.  ஆதனால பழய வீடியோ பதிவு போட்டு பாத்து கண்டுபிடிச்சிடுவோம். அது மட்டுமல்ல கூட்ட நெரிசல பயன்படுத்தி பகல்லேயே பொருளைத்திடுறவன கண்டுபிடிக்கலாம் உங்க கடை ஊழியர்களை கண்காணிக்கலாம் அதனால சிசிடிவி கண்டிப்பா மாட்டுங்க” 

அனைவரிடமும் கையெழுத்து பெற்றபின் கூட்டம் முடிந்தது. 

அந்த சிறுநகரத்தில் ஒரு சிறிய நகைக் கடையில் அமர்ந்தபடி புலம்பிக் கொண்டிருந்தார் சந்தரம் சமீபத்தில் தான் அவர் மகளுக்கு திருமணம் நடத்தியிருந்தார். அதற்கு வேறு நிறைய செலவு செய்திருந்தார். 

“ஏற்கனவே பெரிய கடைகள் எல்லாம் வந்து சிறுகடைகளுக்கெல்லாம் வியாபாரம் படுத்துடுச்சி இப்ப பாத்து இந்த போலீங்காரங்க வேற இதமாட்டு அத மாட்டுன்னு தொல்லை பண்றாங்க” தனக்குள் புலம்பியபடி இருந்தாலும் புதிதாய் மாட்டியிருந்த சிசிடிவியில் தன்னுடைய உருவத்தை தானே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.           
“வீடியோவில் என் தொப்பையே தெரியலியே வயிறு குறைஞ்சிடுச்சா என்ன?” 

கடைப்பையனிடம் வினவினார். 

“ஆங்… கொஞ்சம் பெரிய டி.வியில் பார்த்தா பெரிசாத் தெரியும் இவ்வளவு சின்ன பழய டி.வி. அதுவும் ப்ளாக் அன் நயிட் எங்கேயிருந்து தான் உங்களுக்கு கெடச்சுதோ?”

“டேய் ஒல்ட் இஸ் கோல்டுடா இந்த டிவிய பத்தி ஒனக்கு என்னடா தெரியும் இருபது வருசமா ஒடிகிட்டு இருக்கு இப்ப உள்ள புதுமாடல் ரெண்டு வருசம் கூட தாங்காதேடா? 

“ஆமா இதுக்கு ஒண்ணுட குறச்சல் இல்ல” தனக்குள் முனங்கினான் பையன்.  
முன்தினம்தான் சுந்தரம் தனது கடையில் சிசிடிவி மாட்டியிருந்தார். சிறிது நேரத்தில் ஒரு பெண் கடையில் நுழைந்தார்.  முப்பது வயது இருக்கும் நல்ல உயரம் நல்ல சிகப்பு மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். 
நல்ல வியாபாரம் நடக்க போகிறது என்று எண்ணி மகிழ்ந்து “வாங்க மேடம் வாங்க உக்காருங்க தம்பி மேடத்துக்கு ஒரு கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வா” 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நான் பொருள் வாங்க வரலே நான் க்யூ ப்ராஞ்ச் சி.ஐ.டி எஸ். ரஞ்சனி!”  

மனதிற்குள் திக்கென்று உணர்ந்தார் என்னரது விசாரணைன்னு புரியலியே  அதற்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. 

வந்தவள் ஒரு பேப்பர் எடுத்தாள்.

நான் எஸ்பி ஆபிஸிலிருந்து வர்றேன் மாவட்டம் முழுவதும் எல்ல கடைகளிலிலேயும் சிசிடிவி மாட்டியிருக்கான்று பாத்து ரிப்போட் குடுக்க சொல்லியிருக்காங்க லோக்கல் இன்ஸ்பெக்டர்கிட்டே உங்க ஊரு லிஸ்ட்டெல்லாம் வாங்கிட்டு வர்றேன் 

“அப்படியா” நிம்மதி அடைந்தார். 

“உங்க கடையில சிசிடிவி மாட்டியிருக்கிங்களா?”     

“ஆமாம் மேடம்

“வேற அலாரம் மாட்டியிருக்கீங்களா?”
“இல்லே மேடம்”  

“சீக்கிரம் மாட்டிடுங்க சரியா” என்றபடி பெயர் முகவரி எல்லா எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டாள்.  

சுந்தரமும் பவ்யமாய் போட்டுக் கொடுத்தார். 

“சார் இந்த ஊரில் இன்னும் பத்து கடைகள் போக வேண்டியிருக்கு வெயில் வேற பயங்கரமாயிருக்கு உங்ககிட்ட டூவீலர் ஏதும் இருக்கா?”

“வண்டி…என் பையன் வண்டிதான் எடுத்துட்டு வந்தேன் அது பெரிய பைக் இருநூறு சிசி வண்டி…” 

“நான் எல்லா பைக்கும் ஓட்டுவேன் நான் ட்ரெயினங்குல பைக் சாகசம் எல்லாம் பண்ணியருக்கேன்” 

“ஒஹா” என்றபடி சாவியைக் கொடுத்தார் அவள் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிய அழகு நன்றாகத் தான் இருந்தது. அன்று வியாபாரம் நன்றாக இருந்தது.  மதிய உணவுக்கு கிளம்ப மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. 

அப்போதுதான் கவனித்தார் பைக் வாங்கிச் சென்ற பெண் எஸ்.ஐ. இன்னும் வரவில்லை. 

“பத்து கடையில் ரிப்போர்ட் எழுதிகிட்டு வர இவ்வளவு நேரமா?”

நீரிழிவு என்னும் அரக்கன் வேறு வயிற்றை கிள்ளினனான். 

“ஒருவேளை வேலை முடித்துவிட்டு ஸ்டேசனுக்கு போயிருப்பாங்களோ?” எண்ணியவாறே.

“டேய் தம்பி போலீஸ் ஸ்டேசன் நம்பர் சொல்லு இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவர்தாமே அவர்கிட்ட அங்கே வந்துருக்காங்களான்று கேப்போம்” என்றார்.     
நம்பர் பார்த்து போன் செய்தார். 

“ஹலோ போலீஸ் ஸ்டேசனா நான் சுந்தரம் நகைக்கடையிலிருந்து பேசறேன் இன்ஸ்பெக்டர் சார் இருக்காகரா? 

“ஆமா”
“கொஞ்சம் பேசணும் குடுங்களேன்!” 

இன்ஸ்பெக்டர் லைனில் வந்தார். 

“சொல்லுங்க அண்ணாச்சி” 

“சார் வணக்கம் க்யூப்ராஞ்ச் எஸ்.ஐ ரஞ்சனி மேடம் அங்க இருக்காங்களா?”

“க்யூ ப்ராஞ்ச் எஸ்.ஐ. ரஞ்சனியா அப்படி யாரும் வரலியே” 

“வரலியா உங்ககிட்டதான் லிஸ்ட் வாங்கிட்டு ரிப்போட் எடுக்க வந்தாங்க சார்”  
“அப்படி நாங்க யாரையும் அனுப்பலியே” 

சுந்தரம் அதிர்ச்சியுடன் கத்தினார் 

“சார் எங்க கடையில ஒரு திருட்டு நடந்திருக்கு” 

“அப்படியா நீங்க சி.சி.டி.வி மாட்டிட்டீங்களா?”




6 comments:

  1. Cctv really super....

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுடலை அவர்களே.

    ReplyDelete
  3. Arumaiyana siru kathai..
    Aluthamana karuthuhal..
    Iyalpana nahaisuvai...

    Ungal yeluthin nayam,kathai sollum pangu..arumai ..vallthuhal..

    ReplyDelete
  4. நன்றி பொன்ராஜ் கோல்ட் அவர்களே....

    ReplyDelete
  5. superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
    Replies
    1. நன்றி s.petchimuthu அனைத்து கதைகளையும் படித்து கருத்து எழுதுங்கள்

      Delete

தட்டிக்கொடுத்தாலும் திட்டிவிட்டு போனாலும் சந்தோசமே,,,,,

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.