Wednesday, March 5, 2014

தமிழாய் மாறிய ஆங்கிலம்

                      ஒரு மூலமொழியிலிருந்து கிளைத்து எழுவது பல மொழிகள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்ட ஒரு மொழி பேசும் இனமக்களின் ஒரு பிரிவினர் .வெவ்வேறு பகுதிகளில் குடியேறும் பொழுது அந்தந்த கால, இட, சூழ்நிலைக்கேற்ப அவர்களின் மொழி திரிந்தும், வேற்று மொழிக்கலப்பினாலும் புதிய மொழி உருவாகும்.

                ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டால் பல்வேறு மொழிகளிலும் உள்ளச் சொற்களையும் தமதாக்கிக் கொண்டது.தமிழிலிருந்தும் பல சொற்கள் ஆங்கிலத்துக்குச் சென்றுள்ளது. உதாரணம் அரிசி ரைஸ் இஞ்சி சிஞ்சர்.

                அதே போல் தமிழ்ச்சொற்களாய் மாறிவிட்ட பல ஆங்கிலச் சொற்கள் உண்டு.சென்னையில் உள்ள பார்பர்ஸ் பிரிட்ஜ் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஹாமில்டன் என்ற ஆங்கிலேயேர் கட்டிய பாலம் பேச்சு வழக்கில் அம்பட்டன் பாலம் என்று திரிந்து மீண்டும் அதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தபோது பார்பர்ஸ்பிரிட்ஜ் ஆனது.

                அதே போல் சென்னையில் ஆங்கிலேயர் கடற்படையை ஏமாற்றி திடீர் தாக்குதல் நடத்திய எம்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் நடத்தியது. அதிலிருந்து மிக சாமர்த்தியமாக ஏமாற்றுவர்களுக்கு எம்டன் என்ற பெயர் தமிழ்நாட்டில் உருவாகியது.
               
                வில்லன் என்பது ஆங்கிலச் சொல். அதிலிருந்து உருவான வில்லங்கம் என்ற சொல் பத்திரபதிவுத்துறையில் பிரபலம். இங்கு அநேக  சொத்துக்கள் வில்லங்கத்தில் மாட்டித் தவிப்பது வேறு கதை.

                கிறிஸ்தவ நெறியில் ஆங்கிலச் சொற்களை பெயராக வைத்துக் கொள்வது அனைவரும் அறிவோம்.ஆனால் தென் மாவட்டங்களில் இரண்டு ஆங்கிலச் சொற்கள் இந்துக்களின் பெயர்ச் சொற்களாக மாறி விட்டதை அறிவீர்களாஅதுவும் அவை இரண்டும் இரண்டு தெய்வங்களை குறிக்கும் பெயர்ச் சொற்கள் ஆகும்.

பிரசித்தி பெற்ற காவல்தெய்வமான சுடலைமாடன் தனது பக்தருக்காக ஒரு வழக்கில் உயர்நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னதாக ஒரு கதை உண்டு. ஹைகோர்டில் வந்து சாட்சி சொன்னதால் அவரின் மற்றொரு பெயரான மகாராஜனுடன் சேர்த்து ஐகோட்மகாராஜன் என்று அழைப்பதுண்டு. அவரின் பக்தர்கள் ஐகோட் மகாராஜன் என்று தமது குழந்தைகளுக்கு பெயர் வைத்து ஐகோட்டு என்று அழைப்பது வழக்கம்.

                அந்த பெயருள்ளவர்கள் தனது பெயரை HIGHCOURT என்று எழுதுவதில்லை.ICOT என்றோ IKOT என்றோதான் எழுதுகிறார்கள்.
               
                அதே போல் தமிரபரணி ற்றங்கரையில் ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோயில் உள்ளது.சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அருணாச்சலம் என்பவர் நல்லொழுக்கமுள்ளவராக திகழ்ந்தவர். அவரது ஊரில் சேர்மனாக பதவி வகித்தவர் சிறு வயிதிலேயே இறந்துபோன இவர் பல அற்புதங்களை நிகழ்த்தினாராம். அவருக்குப்பின்னர் கோயில் எழுப்பப்பட்டு அக்கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அவரது பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சேர்மன் என்று பெயர் வைப்பது வாடிக்கையானது. அவர்கள் தங்கள் பெயரை ஆங்கிலத்தில் CHAIRMAN  என்று எழுவதில்லை. SERMAN என்று தான் எழுதுகிறார்கள்..        

                இன்னும் பல சொற்கள் இருக்கலாம் அறிந்தவர்கள் பதிவிடலாம்.

                 


Friday, September 20, 2013

அம்மா தண்ணீர் குடிக்கலாமா?

‘போகிற போக்கை பாத்தால் தண்ணீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் போல’ இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நகைச்சுவையாக இப்படி கூறுவதுண்டு. அது வெகுவிரைவிலேயே உண்மையானதுடன் ஏர் பார்லர் என்ற பெயரில் தூய்மையான காற்றை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கும் காலமும் வந்துவிட்டது.
தண்ணீர் இன்று காசு கொட்டும் முக்கியமான தொழிலாக மாறிவிட்டது. எங்கும் தண்ணீர் பஞ்சம் இருக்கையில் இவர்களுக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியவில்லை.
முறையான தரச்சான்று இல்லாமல் ஒழுங்காக சுத்திகரிக்கப்படாமல் பாட்டில் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதும் அதை அரசு அவ்வப்போது கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கிறது.
ஒழுங்காக முறையாக சுத்திகரிக்கப்பட்டாலும் அந்த தண்ணீர் உயிரற்ற நீர்தான் என்றும் இயற்கையான தண்ணீரில் இருக்கும் தாது உப்புகள் நீக்கப்படுவதாலும்,நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதாலும் உடல் ஆரோக்கியத்து கேடு என்றும் ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
  இந்நிலையில், அம்மா வாட்டர் என்ற பெயரில் அரசு தண்ணீர் விற்பனையை ஆரம்பித்துள்ளது.
ஒரு அரசின் கடமை என்ன?  நீதி, நிர்வாகம்,பாதுகாப்பு மற்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் ஆகும். சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டியது ஒரு அரசின் பொறுப்பு ஆகும். அதை விடுத்து அரசே தண்ணீர் வணிகத்தில் ஈடுபடுவது தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் முறையற்ற செயலாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப சுத்திகரிக்கப்பட்ட நீர் உயர் அழுத்தத்தில் அரசு வழங்குகிறது. நாம் அந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை.
வெளிச்சந்தையில் அதிக விலைக்கு தண்ணீர் விற்கப்படும் நிலையில், புதிய நீர் ஆதாரங்களை கண்டறிந்து, புதிய திட்டங்களை தீட்டி அதில் முதலீடு செய்து மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் அதற்காக பெருமைப்படலாம்.
அதைவிடுத்து நாங்களே குறைந்த விலைக்கு தண்ணீர் தருகிறோம் என்று கூறுவது வெட்கப்படவேண்டிய விஷயமாகும்.
ஏற்கனவே ஒரு தண்ணீர் விற்பனையில் அரசு அதிகம் சம்பாதித்து வருவதால் இந்த தண்ணீர் விற்பனையிலும் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணமா இல்லை நமது குடிமகன்கள் மதுவில் கலப்பதற்கு அதிக விலை கொடுத்து ‘வாட்டர் பாக்கெட்’ வாங்கி கஷ்டப்படுவதால் அவர்களுக்கு உதவும் நோக்கில் மலிவு விலையில் தண்ணீர் கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணமா தெரியவில்லை.
அரசு மது பார்களில் அம்மா வாட்டர் விற்கப்படுகிறதா அங்கு என்னவிலை என்று விபரம் அறிந்தவர்கள் கூறுவார்களாக!

Saturday, June 1, 2013

முரண்சுவை தங்கநகை உற்பத்தி




பல வருடங்களுக்கு முன்பு முரண் சுவை என்ற தலைப்பில் நடிகர் ராஜேஷ் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.

கால மாற்றத்தால் நடைமுறை பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் தொழில் நுப்பங்கள் எப்படி முரணாகிப் போகின்றன என்பதே அந்த கட்டுரைகளின் கரு.

அதே பாணியில் நான் தொடர்ந்து எழுதாலாம் என்று எண்ணி இந்த பகுதியை ஆரம்பிக்கிறேன்.

முதலில் தங்க நகை உற்பத்தியில் ஏற்பட்ட ஒரு முரண்.

முன்பெல்லாம் தங்க நகைப்பட்டறைகளில் மற்ற உலோகங்களை மிகவும் கவனமாக கையாள்வாhக்ள்.  ஏனெற்றால் தப்பித்தவறி தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்து விட்டால் அதன் தரம் குறைந்து விடும் வாய்ப்பு உண்டு.  மற்றொரு விசயம் மற்ற உலோகங்கள் கலந்து விடும்போது அதன் உருகும் வெப்பநிலை குறைந்து விடும்.  குறி;ப்பிட்ட வடிவம் உருவான பின்பு காய வைக்கும் போது உருகிவிட வாய்ப்பு உண்டு.

வேலை கற்றுக் கொள்ளும் இளைஞர்கள் செம்பு அல்லது வெள்ளியிலோ தான் செய்து பார்த்து பழக வேண்டும்.  எனவே அவர்கள் வேலை குறைவான நேரம் முதலாளி ஊரில் இல்லாத சமயம் பார்த்து பழகுவார்கள்.

இருந்தாலும் செம்பு வெள்ளி ஆகிய உலோகங்கள் இல்லாமல் நகை செய்ய முடியாது. ஆனால் அதை தேவைப்படும் நேரத்தில் எடுத்து பயன்படுத்திவிட்டு பத்திரப்படுத்து விடுவார்கள்.

தேவைப்படும் உலோகங்களே இப்படி என்றால் ஈயம் போன்ற உலோகங்கள் (அலுமினியம்ää வெள்ளியம் காரியம்ää பித்தளை) அண்டவே விடுவதில்லை.  தங்கத்தோடு அவை பட நேர்ந்தால் நீர்த்தப்பட்ட கந்தக அமிலம் (சல்ப்பூரிக் ஆசிட்) புளிகரைசல் ஆகிய வற்றில் நன்கு கழுவி விடுவது வழக்கம்.

இப்படி ஒதுக்கிவைகப்பட்ட பிற உலோகங்கள் காலமாற்றத்தால் தற்போது தங்க நகைகளை தரம் உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

இதை அறிந்து கொள்ள தங்க நகைகளை பற்ற வைக்கும் நுட்பம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

கலப்பு உலோகங்கள் தனித்த உலேகத்தை விட உருகுநிலை குறைவு என்று பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம். தங்க நகைகள் பற்ற வைக்க தங்கத்தை விட உருகுநிலை குறைந்த கலப்பு உலோகம் தேவை அதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டது தங்கம் செம்பு வெள்ளி கலவை ஆகும்.  இந்த கலவையில் 20% முதல் 30%வரை செம்பு வெள்ளி சேர்த்தால் தான் உருகி வேலை செய்வதற்கு எளிதாக இருக்கும்.  சமீப காலம் வரை இந்த முறையே பயன்படுத்தப்பட்டது. எனவே இந்த முறையால் செய்த நகைகளை பழசாகின பின் உருக்கும் போது அதில் பற்ற வைக்க பயன்பட்ட கலப்பு உலோகத்தில் உள்ள செம்புää வெள்ளி ஆகியவை சேர்ந்து உருகி அதனுடைய தரத்தில் 1%முதல் 10% வரை குறைவு ஏற்படும்.எனவே தான் பழைய தங்க நகைகள் உருக்கி நகைகள் செய்தால் மச்சம் குறைந்து விடும் என்று சொல்வார்கள்.

நவீன முறையில் பற்ற வைக்க பயன்படுத்தும் கலப்பு உலேகத்தில் செம்பு வெள்ளிக்கு பதிலாக கேடியம்,சிங் போன்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றது.  இந்த முறையால் தங்கத்தோடு மேற்கண்ட உலோகங்கள் 9மூ முதல் 10மூ வரை மட்டும் சேர்க்கப்படுகின்றன.  அதிலும் கேடியம் பற்ற வைக்கும் நேரத்தியே பாதியளவு ஆவியாகி விடும்.  எனவே இந்த முறையில் செய்யப்படும் நகைகள் உருக்கப்படும் படும் போது தரம் (மச்சம்) குறைவதில்லை 916  hallmark நகைகள் இவ்விதம் செய்யப்படுகின்றன.

இப்படி எது தரத்தை குறைத்துவிடும் என்று ஒதுக்கி வைத்தார்களே அதுவே தரத்தை உயர்த்துவதினாலும் தரத்தை நிர்ணயிப்பதினால் பங்காற்றுகின்றன என்பது முரணான சுவையான நிகழ்வல்லவா?

    

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.